For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு!… 6 பேர் உயிரிழப்பு!… மெக்சிகோவில் பயங்கரம்!

09:29 AM Dec 30, 2023 IST | 1newsnationuser3
பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு … 6 பேர் உயிரிழப்பு … மெக்சிகோவில் பயங்கரம்
Advertisement

வடக்கு மெக்சிகோவில் பிறந்த நாள் பார்ட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Advertisement

வடக்கு மெக்சிகோவின் சோனோரா என்ற மாகாணத்தில் உள்ள சிடெட் ஒபெகன் என்ற நகரத்த்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. 15-வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்திவருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் குரூப் ஒன்றின் தலைவர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் அவரை டார்கெட் செய்து இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement