முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்ஸ்டா, பேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இனி மெசேஜ் அனுப்ப முடியாது..!! மெட்டா நிறுவனம் அறிவிப்பு..!!

05:53 PM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020ஆம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messenger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தோடு அந்த சேவையை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இனி, இந்த வசதி மூலம் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் செய்ய முடியாது. ஆனால், ஏற்கனவே இருக்கும் உரையாடல்களை படிக்க மட்டும் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. மெட்டா, தனது மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) முறைக்கு மாற்றவிருப்பதால் இந்த சேவையை நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags :
இன்ஸ்டாகிராம்குறுஞ்செய்திபேஸ்புக்மெட்டா நிறுவனம்
Advertisement
Next Article