அதிர்ச்சி..!! அரசுப் பள்ளியில் அடிதடி..!! பரிதாபமாக உயிரிழந்த 11ஆம் வகுப்பு மாணவன்..!!
அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த நவலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் ரித்தீஷ் என்பவரும் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த இரண்டு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை பள்ளி வளாகத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், இந்த சண்டையை தடுத்துள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஆகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் எருமப்பட்டி
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சம்பத்தின் போது இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் சக மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!