முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்!. ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்!. சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை!.

K'taka: Suspected killer, who chopped woman into 50 pieces, commits suicide
06:26 AM Sep 26, 2024 IST | Kokila
Advertisement

Bengaluru: பெங்களூருவில் பெண்ணை வெட்டி கொலை செய்து 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடல் உறுப்புகளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

பெங்களூருவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மஹாலட்சுமி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது, கடந்த 21ம் தேதி அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தப்போது 'பிரிட்ஜில் 50 துண்டுகளாக வெட்டப்பட்ட மஹாலட்சுமியின் உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மஹாலட்சுமியை கொலை செய்ததாக,முக்தி ரஞ்சன் ராய் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஒடிசாவின் பத்ராக் மாவட்டம், துசிரி கிராமத்தில் நேற்று மாலை, மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு போலீசார் கூறுகையில், 'ஜவுளிக் கடையில் மஹாலட்சுமியுடன் ரஞ்சன் ராயும் பணியாற்றினார். இருவரும் நெருங்கிப் பழகினர். 'அதே கடையில் வேலை செய்த வேறு ஒருவருடன் மஹாலட்சுமி நெருங்கிப் பழகியதால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்' என்றனர்.

Readmore: செஸ் ஒலிம்பியாட்!. வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு!. பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு!

Tags :
Bengalurufridge in 50 piecesSuspected killer suicideWomen murder
Advertisement
Next Article