For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்!. இன்சுலின் பென் கேட்ரிட்ஜ் பற்றாக்குறை!. சர்க்கரை நோயாளிகள் கடும் அவதி!

Patients hit by Insulin Pen cartridge shortage in Kerala
09:16 AM Sep 20, 2024 IST | Kokila
ஷாக்   இன்சுலின் பென் கேட்ரிட்ஜ் பற்றாக்குறை   சர்க்கரை நோயாளிகள் கடும் அவதி
Advertisement

Insulin Pen cartridge: கேரளாவில் இன்சுலின் பேனாவில் மருந்து செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் கார்ட்ரிட்ஜ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

Advertisement

இன்சுலின் பேனாக்களில் பயன்படுத்தப்படும் மருந்துக்கு இரண்டு மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக பல இடங்களில் மருந்துகள் கிடைக்கவில்லை. சிரிஞ்ச் மூலம் செலுத்தப்படும் மருந்தை இன்சுலின் பேனாவில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கேரளாவில் மூன்று வகையான மருந்து வகைகள் உள்ளன. இருப்பினும், தற்போது மிகவும் பிரபலமான பிராண்டான Human Mixtard க்கு பற்றாக்குறை உள்ளது.

மற்ற இரண்டு பிராண்டுகளான வோகார்ட் மற்றும் லில்லியின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த மூன்று பிராண்டு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவை இப்போது கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் கிடைக்கவில்லை.

மருந்துக் கடை உரிமையாளர்கள் கூறுகையில், மருந்து வரத்து குறைந்துள்ளதால், பலர் மருந்துகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் இதுவும் தற்போதைய பற்றாக்குறைக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். தற்போதைய நெருக்கடியை தீர்க்க குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் என்று சப்ளையர்கள் கூறுகின்றனர்.

Readmore: நான் ஒரு தாய்!. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்!

Tags :
Advertisement