For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிவகங்கையில் அதிர்ச்சி..!! மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் பலி..!!

01:42 PM Jan 17, 2024 IST | 1newsnationuser6
சிவகங்கையில் அதிர்ச்சி     மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் பலி
Advertisement

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3ஆம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.

Advertisement

காளை முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கரன் என்ற அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதேபோல், இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் 35 வயதான இளைஞர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இதனால், சிராவயல் மஞ்சுவிரட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement