For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!. டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!. வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!.

Shock!. An Air India flight made an emergency landing in Delhi! Passengers panic due to bomb threats!
09:19 AM Oct 14, 2024 IST | Kokila
அதிர்ச்சி   டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்   வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி
Advertisement

Air India flight: மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

Advertisement

மும்பையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில், பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, பத்திரமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Readmore: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்!. மத்திய அமைச்சருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வலியுறுத்தல்!

Tags :
Advertisement