For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மீண்டும் அதிர்ச்சி..!! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி..!!

The incident in Kallakurichi where 3 people died after drinking fake liquor has caused a shock.
12:51 PM Jun 19, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் மீண்டும் அதிர்ச்சி     கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படுகிறது. இதில் சுரேஷ், பிரவீன், சேகர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்தாண்டு மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க இன்னும் தீவிர நடவடிக்கைகள் தேவை என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Read More : நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் மேலாளரின் சடலம்..!! போலீசாரிடம் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement