முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறையில் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்!! மருத்துவமனையில் அனுமதி!! தாயார் தாக்கல் செய்த மனுவில் புதிய உத்தரவு

05:52 AM May 10, 2024 IST | Baskar
Advertisement

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து “கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளது. சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை” பதிலளித்தார். மேலும் ‘சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்?’ என பதிலளித்த அவர், “அவருக்கு ஏற்கெனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம். அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது” எனவும் தெரிவித்தார்.மேலும், “சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கைபடி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More: ஹரியானாவில் ஆட்சியை இழக்கும் பாஜக அரசு..! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம்..!

Tags :
Savukku Shankar Case
Advertisement
Next Article