For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

WWE தலைமையகத்தில் வைத்து பாலியல் தொல்லை..!! தலைவர் பதவியிலிருந்து விலகிய Vince McMahon..!!

08:30 AM Jan 29, 2024 IST | 1newsnationuser6
wwe தலைமையகத்தில் வைத்து பாலியல் தொல்லை     தலைவர் பதவியிலிருந்து விலகிய vince mcmahon
Advertisement

உலகின் மிகப்பெரிய, மல்யுத்த நிறுவனம் WWE. 90's கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவராலும் இன்றளவும் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த வாரம் நெட்ஃபிக்ஸுடன் WWE-ன் Raw நிகழ்ச்சியை ஜனவரி 2025 முதல் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யவும், 31 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக , வின்ஸ் மக்மஹோன் (78) இருந்து வருகிறார். 2022ஆம் ஆண்டில், இவர் மீது பாலியல் புகார் எழுந்தது. தொடர்ந்து, அவர் WWE-ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார். வின்ஸ் மக்மஹோனுக்கு பதிலாக அவரது மகள் தற்காலிக தலைமை நிர்வாகி மற்றும் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஜனவரி 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் குறித்து நிறுவனம் விசாரணையை முடித்த பின்னர், அவர் WWE-ன் தலைமை நிர்வாகியாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநிலத்தில் WWE-ன் முன்னாள் ஊழியர் ஜேனல் கிராண்ட் என்பவர், கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். அதில், ’மக்மஹோன் WWE-ன் தலைமை நிர்வாகி பதவியில் இருந்தபோது, அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மனநல சித்ரவதை செய்து, உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டார். வேலை வேண்டுமானால், அவரோடு படுக்கையைப் பகிர்ந்திருக்க வேண்டும் எனக் கேட்டார். என் குடும்பச் சூழலை அவருக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார். அந்த நேரத்தில் பாலியல் உறவு கொள்ள ஜான் லாரினிடிஸ் உட்பட சில நபர்களை மக்மஹோன் பயன்படுத்திக் கொண்டார். வேலை நேரத்தில்கூட, WWE தலைமையகத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபடுவர்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய வின்ஸ் மக்மஹோன், “கிராண்ட்டின் வழக்கு அபத்தமான கற்பனைகள். ஒருபோதும் நடக்காத பொய் சம்பவங்கள். இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நான் என்னைப் பாதுகாக்க முயல்வேன். நான் குற்றமற்றவன் என்ற முறையில் என் பெயரைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என கூறினார்.

மக்மஹோன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த WWE ஒரு சட்டக் குழுவை நியமித்துள்ளது. விசாரணை முடிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வின்ஸ் மக்மஹோன் WWE மற்றும் அதன் தாய் நிறுவனமான TKO ஆகியவற்றில், தான் வகித்து வந்த பதவிகளில் இருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார்.

Tags :
Advertisement