For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது" உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு..!

10:57 AM Apr 29, 2024 IST | Kathir
 செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது  உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு
Advertisement

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisement

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், செந்தி பாலாஜிக்கு எதிரான வழக்கில் மூன்று மாத காலத்தில் விசரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த மனுக்கள் மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், "செந்தில்பாலாஜி விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல் ஏ பொறுப்பில் உள்ளதால், அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கூடிய அபாயமும், வழக்கின் விசாரணையிலும் முட்டுக்கட்டையாக இருப்பர் என்பதால் செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்க கூடாது" போன்ற பல்வேறு விஷயங்களை இந்த மனுவில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

செந்தில்பஜையின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது செந்தில்பாஜிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

Tags :
Advertisement