For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் நொந்துபோன Senthil Balaji..!! 27-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

06:17 PM Mar 18, 2024 IST | 1newsnationuser6
மீண்டும் நொந்துபோன senthil balaji     27 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Advertisement

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 27-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா்.

Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 18 (இன்று) திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மாா்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 27-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More : தேர்தல் பணிக்காக வந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து..? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Advertisement