For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம குட் நியூஸ்..!! இன்னும் 2 நாளில் உரிமைத்தொகை ரூ.1,000 வந்துவிடும்..!! பொங்கலை முன்னிட்டு முடிவு..!!

11:15 AM Jan 05, 2024 IST | 1newsnationuser6
செம குட் நியூஸ்     இன்னும் 2 நாளில் உரிமைத்தொகை ரூ 1 000 வந்துவிடும்     பொங்கலை முன்னிட்டு முடிவு
Advertisement

பொங்கல் பண்டிகையை மனதில் வைத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வரும் 7ஆம் தேதியே ரூ.1,000 பணம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி மாதம் முதல் மேலும் சில பயனாளிகளுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இதற்கான புதிய விண்ணப்பங்கள் அளிக்கப்படும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர்.

இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டவுள்ளன. அதேபோல் ஜனவரி முதல் கூடுதலாக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும் சிலர், இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனராம். அவர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பணம் வழங்கும் தேதியான 15ஆம் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை மனதில் வைத்து வரும் 7ஆம் தேதியே தேதி பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் பொங்கல் பரிசுத்தொகை 1,000 ரூபாய் வேறு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து மக்களுக்கு பணமழை குவிய உள்ளது.

Tags :
Advertisement