முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதே செல்வகணபதி தான்”..!! எடப்பாடி பழனிசாமி ஒரே போடு..!!

10:41 AM Apr 13, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement

இந்நிலையில், ஜெயலலிதா சிறைக்கு செல்ல முக்கிய காரணம் திமுக வேட்பாளர் செல்வகணபதி தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்களின் உழைப்பால், அடையாளம் காணப்பட்ட செல்வகணபதி, தற்போது வேட்டியை மாத்தி கட்டி விட்டு திமுக வேட்பாளராக உள்ளதாக சாடினார்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால், அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார். முன்னதாக, நம்பிக்கை துரோகத்திற்கு சிறந்த உதாரணம் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டியிருந்தார் செல்வகணபதி.

Read More : ”இதை யார் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள்”..!! உதயநிதி ஸ்டாலின் தடாலடி..!!

Advertisement
Next Article