முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நித்தியானந்தாவின் சிஸ்யைகளை வம்பிழுத்த சீமான்..!! நல்ல நல்ல பிகருங்களோட இருக்கான்..!! வைரலாகும் அதிர்ச்சி ஆடியோ..!!

Seeman is currently embroiled in yet another controversy. An audio related to him has gone viral on social media and has been criticized by netizens.
03:27 PM Jul 20, 2024 IST | Chella
Advertisement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், சில திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார். அந்த வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் இயக்கிய வாழ்த்துகள் என்ற படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்திருந்தார். அப்போது தங்களுக்கு காதல் ஏற்பட்டதாகவும் மாலை மாற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் விஜயலட்சுமி புகார் கூறி வந்தார். மேலும், தனக்கு திருமண ஆசை காட்டி தன்னுடன் குடித்தனம் நடத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement

இதற்கெல்லாம் ஒருபடி மேலே என்று, சீமானால் தான் 7 முறை கர்ப்பமாகியும் தனது அனுமதியின்றி மாத்திரைகளை கொடுத்து சீமான் கருச்சிதைவு செய்துவிட்டார் என்றும் விஜயலட்சுமி பரபரப்பு புகாரை கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அப்போது பேசுபொருளாக மாறியது.

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும், திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும் ஒருபக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சீமான் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இவர் தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. அந்த ஆடியோவில், ”பணக்காரனா இருக்குறது எனக்கு பிரச்சனை இல்ல.. நகை போட்டுக்குறது, தங்க நாற்காலியில உட்காறுவதெல்லாம் பிரச்சனை இல்ல.. பிகருங்களோட இருக்கான். அதான் வெறுப்பா இருக்கு.. நல்ல நல்ல பிகரா இருக்கு.. அதுவும் வெள்ளைக்கார பிகரா வெச்சிருக்கான். அதான் வெறுப்பா இருக்கு” என்று சாட்டை துரைமுருகனிடம் பேசுவது போன்ற ஆடியோ வைரலாகி வருகிறது.

இதில், ’பிகருங்களோட இருக்கான்’ என சீமான் யாரை குறிப்பிடுகிறார் தெரியுமா..? பாலியல், கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, போலீஸ் பிடியில் சிக்காமல், கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி, புதிய சட்டங்கள், புதிய நாணயங்களை உருவாக்கி சிஸ்யைகளோடு ஜாலியாக வாழ்ந்து வரும் நித்தியானந்தாவை தான். அவரை பார்த்து தான் வெறுப்பாக இருக்கிறது என்று சீமான் சொல்கிறார். இது வைரலாகி வரும் ஆடியோவில், நித்தியானந்தா மற்றும் அவரது சிஸ்யைகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதை குறிப்பிட்டு தான், சீமானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read More : வினாத்தாள் கசிந்த மையங்களில் 100-க்கும் மேற்பட்டோர் 600க்கு மேல் மதிப்பெண்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
கைலாசாசிஸ்யைகள்சீமான்நித்தியானந்தா
Advertisement
Next Article