For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Seeman | ”எனக்கு செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன்”..!! சீமான் அதிரடி பேட்டி..!!

05:56 PM Mar 04, 2024 IST | 1newsnationuser6
seeman   ”எனக்கு செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன்”     சீமான் அதிரடி பேட்டி
Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நம்மை மாதிரி அவர்களும் பதிவு செய்யப்பட்ட கட்சி தான். அவர் கர்நாடகாவில் ஒரு சின்னம். ஆந்திராவில் ஒரு சின்னம் வாங்கி இருக்கிறார். 11 மாநிலத்திற்கு ஒரு சின்னம் வாங்கி இருக்கிறார். நான் கேட்கவில்லை. அவங்களாக தான் கொடுத்ததாக சொல்கிறார்.

Advertisement

நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவுக்கு பிறகு நாங்கள் தான். அதை ஏற்காமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக சொல்கிறார்கள்.‌ வெள்ள சேதம் காரணமாக தூத்துக்குடி சென்றதால் அந்த நேரம் நான் கொஞ்சம் தாமதமாக கொடுத்தேன். கமல்ஹாசனின் டார்ச் சின்னம் வெளிவரும் போது இதுவும் வருகிறது. இதை கேட்டால் உரிய பதில் சொல்லவில்லை. இருவரிடமும் மனுவை வாங்கிக் கொண்டு இந்த சின்னத்திற்கு யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதை செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 7 விழுக்காடு ஓட்டு வாங்கியிருக்கும் போது எனக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும்.

டிசம்பர் 17ஆம் தேதி மனு கொடுக்கிறார். அப்போதே சின்னத்தை எடுத்து
கொடுத்தார்கள். ஆனால், நான் சின்னம் வாங்கும் போது தேர்தல் அறிவித்து 10
நாட்கள் கழித்துதான் கொடுத்தார்கள். ஆனால் அவருக்கு, தேர்தல் வரவில்லை. தேர்தல்
அறிவிக்கவில்லை. டிசம்பர் 17ஆம் தேதியே எப்படி அந்த சின்னத்தை கொடுத்தீர்கள்? இதை திட்டமிட்டே செய்ததாக தான் நினைக்கிறேன். நாம் கட்சி ஆரம்பித்ததும் விவசாயி சின்னம் வரும்னு இல்லையே. நான் கொண்டு போனதால் தான் விவசாயி. என்னுடைய மாநிலமான தமிழ்நாடு, புதுச்சேரியில் எனக்கு ஒதுக்குங்கள். முன்னுரிமை அடிப்படையில் விவசாயி சின்னம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்துள்ளோம். அவர் பரிந்துரைப்பதாக
கூறியிருக்கிறார். இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வரும். அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்வேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிய வேண்டும். எந்த சின்னமும் இல்லையென்றாலும் போட்டியிடுவேன். இது எப்படி முறையாகும்? நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னீங்க. அடுத்து மயில் கேட்டேன். தேசிய பறவைன்னு சொன்னீங்க. ஆனால் தேசிய மலர் தாமரையை பிஜேபிக்கு எப்படி கொடுத்தீங்கன்னு கேட்டேன்.

நீங்கள் அந்த மாதிரி கொடுத்திருக்க கூடாது தானே? தேர்தல் நேரத்தில் சின்னங்களை
எல்லாம் மறைக்கிறீர்கள். கை சின்னத்தை கொடுத்தீர்கள். வாக்கு செலுத்தி விட்டு
கையை ஆட்டி கொண்டு சென்றால் கையை வெட்டி விடுவீர்களா? நீங்கள் அப்போது
முடிவுக்கு வர வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொருவருக்கும் புதிது
புதிதாக கொடுத்து விடுங்கள். நீங்கள் 8 விழுக்காடு தொட வேண்டும் என்கிறீர்கள். 7 தொட்டவுடன் சின்னத்தை தூக்கி விடுகிறீர்கள்? இது தான் ஜனநாயகமா? லஞ்சம், ஊழல் செய்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். எப்படி ஒழியும்? கடைசியாக எந்த சின்னம் கொடுத்தாலும் சரி தான்.

துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன். எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன். எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள். நான் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். வேளாண்மை அரசு பணி என்கிறேன். நான் வேளாண் குடிமகன்
என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதனால், விவசாய சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Read More : பேரதிர்ச்சி..!! தேர்வெழுத வந்த மாணவிகள் மீது Acid வீசிய இளைஞர்..!! ஒருவர் கவலைக்கிடம்..?

Advertisement