For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பயத்தில் சீமான்!. ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி!. 6 மணிக்கு மேல் வெளியே செல்லமாட்டாராம்!. பாதுகாவலர்கள் மாற்றம்!

Seaman in fear! Armstrong Murder Echo!. Will not go out after 6 o'clock! Changing of the guards!
07:07 AM Jul 18, 2024 IST | Kokila
பயத்தில் சீமான்   ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி   6 மணிக்கு மேல் வெளியே செல்லமாட்டாராம்   பாதுகாவலர்கள் மாற்றம்
Advertisement

Seeman: ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவித பதற்றத்தில் இருப்பதாகவும் அவரது பாதுகாவலர்களை மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானது. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது. இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு வித பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இனிமாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வதில்லை என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனது பாதுகாப்பு பணியில் இருந்த நபர்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்து இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Readmore: அமெரிக்க அதிபர் பைடனுக்கு கொரோனா பாசிட்டிவ்!. வெள்ளை மாளிகை அறிவிப்பு!

Tags :
Advertisement