For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

The school education department has announced that all schools will open on June 6 after the summer vacation in Tamil Nadu.
01:26 PM May 24, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு     பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வெயில் மற்றும் மழை பெய்து வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூன் 6ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : Cyclone | நாளை உருவாகிறது புயல்..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Advertisement