Salary Increase | 100 நாள் வேலை ஊதியம் ரூ.400 ஆக உயர்வு..!! இனி நகர்ப்புறங்களிலும் வேலை..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
05:07 PM Mar 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement
கிராமப்புற பெண்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.