For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விடாமல் துரத்தும் சோகம்!! ராசி இல்லாத அணியாக மாறிய ஆர்சிபி!!மனம் நொந்துபோன விராட் கோலி!!

05:30 AM May 23, 2024 IST | Baskar
விடாமல் துரத்தும் சோகம்   ராசி இல்லாத அணியாக மாறிய ஆர்சிபி  மனம் நொந்துபோன விராட் கோலி
Advertisement

எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது ஆர்சிபி.

Advertisement

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஆர்சி பி அணி பில்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. லீக் சுற்று முடிவில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து விட்டு ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.ஆனால் ஐபிஎல் கோப்பையை வென்றது போல் ஆர் சி பி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த சூழலில் பிளே ஆப் சுற்றில் ஆர் சி பி அணி எப்போதும் தடுமாறுவது வழக்கமாகும்.

ஆர் சி பி அணி எப்போதும் முக்கிய கட்டத்தில் ஏதேனும் தவறுகளை செய்து சிக்கிக் கொள்வார்கள். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர் சி பி முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 45 ரன்கள் சேர்த்தார். முதலில் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருடைய விக்கெட்டை விரைவில் எடுக்க வேண்டுமென ஆர்சிபி ரசிகர்கள் முயற்சித்தனர். இந்த சூழலில் ரன் அவுட் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. கரன் சர்மா வீசிய பந்தை சஞ்சு சாம்சன் அடித்தார். அதனை பிடித்த விராட் கோலி விரைவாக பவுலரிடம் கொடுத்தார்.ஆனால் கரன் சர்மா அந்த பந்தை பிடித்து ரன் அவுட் செய்யாமல் அப்படியே நின்று விட்டார்.இது தொடர்பான வீடியோகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.

Read More: சென்னையை அதிரவைத்த சம்பவம்..!! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்..!! ஒரு நைட்டுக்கு ரூ.30,000..!!

Advertisement