முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகன் இறந்த சோகம்..!! அதே ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்..!!

10:36 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் சாந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (47). இவரது கணவர் ரமேஷ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துச் சென்றுவிட்டார். அந்த மன உளைச்சலில், அவரது மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் லோகேஸ்வரன் (30) மத்திய நிறுவனமான ஆவடி எச்.வி.எப்., நிறுவனத்தில், ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், லோகேஸ்வரன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பரமேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, லோகேஸ்வரன் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த அதிர்ச்சியில் பரமேஸ்வரி, அதே அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயில் போலீசார், இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
காவல்துறை விசாரணைசென்னைதாய் - மகன் தற்கொலை
Advertisement
Next Article