For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சரக்கு கப்பலை கைப்பற்றிய ஈரான்...! சிக்கிய 17 இந்தியர்கள்... ஜெயசங்கர் அதிரடி நடவடிக்கை...!

06:00 AM Apr 15, 2024 IST | Vignesh
சரக்கு கப்பலை கைப்பற்றிய ஈரான்     சிக்கிய 17 இந்தியர்கள்     ஜெயசங்கர் அதிரடி நடவடிக்கை
Advertisement

ஈரானிய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் 25 பேர் கொண்ட பணியாளர்களில் 17 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானிய பிரதமரிடம் பேசிய மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெயசங்கர்.

Advertisement

இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது 300 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் அமைதியை இழந்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இது குறித்து கூறுகையில்; “ஈரான், சிரியா, ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள எங்கள் படைகள் இடைமறித்தன. ஈரானுடனான மோதலை எனது நாடு விரும்பவில்லை, ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவாக செயல்படத் தயங்காது என தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பகைமை குறித்து இந்தியா ஞாயிற்றுக்கிழமை கவலை கொண்டுள்ளதுடன், வன்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு, இராஜதந்திரப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. ஈரானிய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் 25 பேர் கொண்ட பணியாளர்களில் 17 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானிய பிரதமர் எச் அமிரப்டோலாஹியனிடம் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Tags :
Advertisement