முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கழிப்பறைக்கு செல்ல ஒரு ரூபாய்க்கு பதில் ரூ.5 வசூல்..!! ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!

04:15 PM Nov 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கழிப்பறைக்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில் ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அங்கு சிறுநீர் கழிக்க கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் வாங்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் சுந்தரம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 ரூபாயில் 4 ரூபாயை திரும்ப தரவும், 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், மேலும் வழக்கு செலவு ரூ.10,000 வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதை நகராட்சி ஆணையாளர் மற்றும் குத்தகைதாரர் இருவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
கழிப்பறைகூடுதல் கட்டணம்விருதுநகர் மாவட்டம்
Advertisement
Next Article