முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கடைசி வாய்ப்பு...! தமிழ் ஆர்வலர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்...! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Rs 25,000 will be given to Tamil activists...! Tomorrow is the last day to apply
05:55 AM Jul 11, 2024 IST | Vignesh
Advertisement

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் ஆர்வலர்களைக் தொண்டினைப் பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும் ரூ.25,000 பரிசுத் தொகை மற்றும் தகுதியுரையும் வழங்கி சிறப்பித்து வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தருமபுரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

தமிழ் வளர்ச்சித் விண்ணப்பங்களை துறையின் வலைதளத்திலிருந்து இலவசமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு 12.08.2024 ஆம் நாளுக்குள் அனுப்பப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Applydharmapuri dtTamil activiststn government
Advertisement
Next Article