For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக அரசு தூள் அறிவிப்பு... தமிழ் ஆர்வலர்களுக்கு ரூ.25,000... ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

Rs.25,000 for Tamil enthusiasts... can apply online
07:09 AM Jul 26, 2024 IST | Vignesh
தமிழக அரசு தூள் அறிவிப்பு    தமிழ் ஆர்வலர்களுக்கு ரூ 25 000    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Advertisement

"தமிழ்ச் செம்மல் விருது" பெறுவதற்கு தமிழ் ஆர்வலர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச்செம்மல் விருது" 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக அல்லது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக, தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது எனவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது.

இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது தன் விவாக் குறிப்பு, வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகலுடன், இரண்டு நிழற்படங்கள் மற்றும் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 10.08.2024-ஆம் நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.

Tags :
Advertisement