முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.2,500 கோடி..!! மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

Prime Minister Modi will inaugurate the Rs 2,500 crore Lakpati Diti Sammelanam (Women's Self Help Group) scheme tomorrow.
06:34 PM Aug 24, 2024 IST | Chella
Advertisement

ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் லக்பதி திதி சம்மேளனம் (மகளிர் சுயஉதவிக் குழு) திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Advertisement

பிரதமர் மோடி, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடனான தனது 3 நாள் அரசுப் பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்ப இருக்கிறார். நாளை ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா நிகழ்வு பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ”மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நாளை (ஆகஸ்ட் 25) லக்பதி திதி சம்மேளனத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இதில், ​11 லட்சம் மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பெண்கள் அதிகாரம் பெறுவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுய உதவி குழுக்களில் உறுப்பினராக உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,500 கோடி சுழற்சி நிதியுதவி வழங்கும் நிகழ்வு தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

Read More : மக்களே உஷார்..!! இதை உண்மையென நம்பிடாதீங்க..!! ரொம்ப டேஞ்சர்..!! எச்சரிக்கும் ஆணையம்..!!

Tags :
modiபிரதமர் மோடிமகளிர் சுய உதவிக்குழு
Advertisement
Next Article