For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை...!

06:27 AM Sep 23, 2024 IST | Vignesh
பரபரப்பு     ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி சென்றபோது, என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல்.

Advertisement

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட 28 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசிங் ராஜாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று காலை ஆந்திர மாநிலம், கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி சென்றபோது, என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement