முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை...!

Rowdy arrested in Armstrong murder shot dead in encounter
07:29 AM Jul 14, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை மாதவரத்தில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சுட்டுக்கொலை.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து அன்று மாலையே 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருவேங்கடம் என்பவர் உயிரிழந்தார்.

Tags :
ArmstrongChennaiencountertn police
Advertisement
Next Article