முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TVK | நடிகர் விஜய்யின் கட்சியில் இணைந்த பிரபல திரையரங்க உரிமையாளர்.!

09:11 PM Mar 19, 2024 IST | Mohisha
Advertisement

சென்னையில் பிரபலமான ரோகினி திரையரங்கில் இயக்குனர் ரேவந்த் சரண் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் தளபதி விஜய். நீண்ட காலமாக இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தனது விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றி அரசியலுக்கு வருகை புரிந்தார்.

2026 ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள இவர் தனது கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலை ஒன்றையும் சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் பல லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் அவரது கட்சியில் தங்களை இணைத்துள்ளனர். இந்நிலையில் சென்னையின் பிரபலமான ரோகினி தியேட்டரின் இயக்குனர் ரேவந்த் சரண் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து இருக்கிறார்.

இது தொடர்பாக தனது X வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் " 20 வருடங்களுக்கும் மேலாக தளபதி விஜய்யின் ரசிகராக இருந்து வருகிறேன். தளபதி விஜயின் தலைமையில் தமிழகத்தை முற்போக்கான ஊழலற்ற பாதுகாப்பாக மாநிலமாக மாற்றும் அவரது சிந்தனையுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவு செய்துள்ளார்.

Read More: கிருத்திகா ஸ்டாலின் பெயரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! தீவிர விசாரணையில் காவல்துறை.!

Advertisement
Next Article