முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்! குவியும் பாராட்டுக்கள்!!

04:51 PM Apr 03, 2024 IST | Baskar
Advertisement

நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக்கும் கடந்த 24-ம் தேதி மதுரையில் கோலாகலமாக நடந்தது. இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடந்தது.. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

இந்திரஜா திருமணம் செய்துகொண்ட கார்த்திக், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி என கூறப்பட்ட நிலையில், ஆதரவற்ற தன்னை பிரியங்கா தான் தத்தெடுத்து வளர்த்தார் என்று கார்த்திக் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல தான் சொந்தமாக கட்டிய அன்பு இல்லம் என்ற வீட்டில் 27 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கார்த்திக் செய்து வருகிறார்.

மேலும், சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட கார்த்திக், பிரபல யு டியூப் சேனல் ஒன்றுக்கு அளிட்ட பேட்டியில், அன்பு இல்லத்திற்கு வந்தால் எப்போதும் சாப்பாடு இருக்கும். கீரை விற்பவர்கள், முடியாதவர்கள் என யார் வேண்டுமானாலும் இங்கு சாப்பிடலாம். இதே மாதிரி கடைசி வரை சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.

கார்த்திக்கின் வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கான அறை, புத்தகங்கள் வைப்பதற்கான அறை, ஓய்வெடுக்கும் அறை என பல அறை இருக்கிறது. தனக்கு குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு கூட இந்த வீடு இருக்குமா என்று தெரியாது எனவும் இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்த வீடு இருக்கும் என்று உறுதிபட தெரிவித்தார். தனது 6 வயதில் தந்தையை இறந்த தனக்கு இந்த சமூகம் நிறைய உதவிகளை செய்துள்ளதால் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது அவருடன் இந்திரஜாவும் இணைந்துள்ளார். இந்திரஜாவும் தற்போது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து, குழந்தைகளை அன்புடன் கவனித்து வருகிறாராம்.. கார்த்திக் – இந்திரஜாவின் சேவை தொடர பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement
Next Article