முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிரியா குண்டு வெடிப்பு : 7 குழந்தைகள் பலி!

12:33 PM Apr 07, 2024 IST | Mari Thangam
Advertisement

தெற்கு சிரியாவின் டரா மாகாணத்தில் பயங்கரவாதிகளால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

Advertisement

தென்மேற்கு சிரியாவின் டரா மாகாணம் அருகே வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்டானுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளுக்கும் இடையே உள்ள மோதலால் பாதிக்கப்பட்டுள்ளது டரா மாகாணம். இதன் வடக்கு கிராமப்புறங்களில் வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags :
bomb blastChild killedsyria
Advertisement
Next Article