For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கண் திருஷ்டி, பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளால் கஷ்டப்படுகிறீர்களா.? நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!

06:30 AM Dec 04, 2023 IST | 1newsnationuser4
கண் திருஷ்டி  பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளால் கஷ்டப்படுகிறீர்களா   நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
Advertisement

மனிதர்களாகிய அனைவரும் வாழ்வில் நேர்மறையான சிந்தனையுடன் அமைதியான சூழ்நிலையில் நல்ல செல்வ வளத்தோடு வாழ்வதையே விரும்புவோம். எனினும் நம்மை சுற்றி இருக்கின்ற மக்களின் பொறாமை எண்ணங்கள் அவர்களது கண் திருஷ்டி வழியாக வெளிப்பட்டு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

நம் வீட்டை சூழ்ந்திருக்கும் எதிர் வினைகள் கண் திருஷ்டி மற்றும் பொறாமை எண்ணங்கள் நீங்குவதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேறமும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு மண் சட்டியை எடுத்து அதனை வேப்ப மரத்தின் நிலைகளால் நிரப்பி கொள்ள வேண்டும். வேப்ப மரத்தின் இலைகளை நிரப்பிய பிறகு அவற்றில் 1 ஸ்பூன் கிராம்பு மற்றும் 1 ஸ்பூன் கற்பூரம் சேர்க்க வேண்டும். இவற்றுடன் 7 பிரிஞ்சி இலைகள் சேர்த்த பிறகு இரண்டு கம்ப்யூட்டர் சாம்பிராணிகளை நன்றாக உடைத்து பொடி செய்து இவற்றின் மீது தூவ வேண்டும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கற்பூரத்தை நெருப்பினால் பற்ற வைக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக எரிந்து சாம்பலாகும் வரை எரிய விட வேண்டும். இவற்றில் இருந்து வரும் புகை நம் வீட்டில் நிறைந்து இருக்கும் எதிர்மறை சிந்தனைகளை வெளியேற்றுவதோடு வீட்டை சூழ்ந்திருக்கும் பொறாமை மற்றும் கண் திருஷ்டி போன்றவையும் இந்தப் புகையோடு வெளியேறும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement