For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மரண பீதியிலும் நெகிழ்ச்சி!… நிலநடுக்கத்தில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்!... வைரலாகும் வீடியோ!

07:07 AM Apr 05, 2024 IST | Kokila
மரண பீதியிலும் நெகிழ்ச்சி … நிலநடுக்கத்தில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்     வைரலாகும் வீடியோ
Advertisement

Taiwan: தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, குழந்தைகளை காப்பாற்றி செவிலியர்களின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நேற்று அதிகாலையில் 7.5 ரிக்டர் அளவில் தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தில், இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் 10 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது செவிலியர்கள் செய்த துணிச்சலான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் வைத்து பாதுகாப்பு அரணாய் நின்றனர். மருத்துவமனை சிசிடிவியில் பதிவாகி இருந்த இந்த காணொலி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Readmore:செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு…! சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Advertisement