முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கஷ்டங்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சி பெருக இந்த ஒரு பரிகாரம் பண்ணுங்க போதும்.!?

05:40 AM Jan 31, 2024 IST | 1newsnationuser5
Advertisement

நாட்கள் செல்ல செல்ல கஷ்டங்கள் கூடிக்கொண்டே செல்கிறது என்று பலரும் புலம்புவதை கேட்டிருப்போம். என்னதான் அதிகமாக சம்பாதித்தாலும் வீட்டில் நிம்மதி இல்லை. கஷ்டங்கள் தான் அதிகமாகி கொண்டு செல்கிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர். இதை தீர்ப்பதற்காக பல பரிகாரங்கள் இருந்து வந்தாலும் சித்தர்கள் சொன்ன குப்பைமேனி செடியை வைத்து செய்யும் இந்த பரிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

Advertisement

சித்தர்கள் நம் வாழ்வின் நன்மைக்காக பல மூலிகைகளையும் அதன் பலன்களையும் கூறியுள்ளனர். அதில் குறிப்பாக குப்பைமேனி செடி மற்றும் வேரின் நன்மைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்டிருகின்றனர். அதாவது இந்த குப்பைமேனி செடியை வைத்து பரிகாரம் செய்தால் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்று கூறியுள்ளனர். இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

சனிக்கிழமையில் சூரிய உதயத்திற்கு முன்பாக சென்று குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து வர வேண்டும். இந்த குப்பைமேனி செடியை பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் பண வரவு அதிகமாகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும், துன்பங்கள் விட்டு விலகி ஓடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கும் சக்தி குப்பைமேனி செடிக்கு உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமைகளில் குப்பைமேனி இலையை செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வேர் முழுவதுமாக மூழ்கி இருக்கும்படி பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் செய்துவர கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் விட்டு விலகுவார்கள் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
Remediesகுப்பைமேனிசித்தர்கள்
Advertisement
Next Article