For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாயு தொல்லையா இருக்குதா.! இதை சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே தீர்வு கிடைக்கும்.!

05:50 AM Jan 24, 2024 IST | 1newsnationuser5
வாயு தொல்லையா இருக்குதா   இதை சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே தீர்வு கிடைக்கும்
Advertisement

பொதுவாக வாயு பிரச்சனை என்பது பலரும் எதிர்கொள்ளும் சங்கடமான மற்றும் பொதுவான பிரச்சனையாகும். நாம் உண்ணும் உணவுகளாலும், நம் உடலில் செரிமான உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளாலும் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. பொது இடங்களில் வாயு பிரச்சனை ஏற்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.

Advertisement

வயிற்றில் உருவாகும் வாயு தொல்லை, வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம், வயிறு உப்புசம், செரிமான கோளாறு, மலச்சிக்கல், போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல மருந்துகள் எடுத்து வந்தாலும் அவை நிரந்தர தீர்வாக இருந்திருக்காது. இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து நிரந்தரமாகவும், உடனடியாகவும் விடுதலை பெறலாம்.

அதாவது வாயு தொல்லை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருப்பவர்கள் தேனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். தேனை எப்படி பயன்படுத்தினால் உடலுக்கு நன்மை தரும் என்பதை குறித்து பார்க்கலாம்?

வாயு தொல்லை பிரச்சினையால் அவதியுற்று வருபவர்கள் தேனை சிறிதளவு எடுத்து சுடுதண்ணியில் கலந்து குடித்து வந்தால் இந்த பிரச்சனை உடனடியாக குணமாகும். மேலும் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கு தேன் அருமருந்தாக இருந்து வருகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி வாயு தொல்லை, வயிறு பிடிப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவு வராமல் பாதுகாக்கிறது.

Tags :
Advertisement