For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’குழந்தை இருக்கும்போதே வேறொருவருடன் உறவு’..!! ’இரண்டு அறைகளில் தனித்தனியாக’..!! நடிகர் மோகன் பகீர் தகவல்..!!

05:57 PM Mar 14, 2024 IST | 1newsnationuser6
’குழந்தை இருக்கும்போதே வேறொருவருடன் உறவு’     ’இரண்டு அறைகளில் தனித்தனியாக’     நடிகர் மோகன் பகீர் தகவல்
Advertisement

தன்னுடைய முன்னாள் மனைவியான லட்சுமி குறித்தும், அவருடைய மகள் ஐஸ்வர்யா குறித்தும், நடிகர் மோகன் ஷர்மா இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் கூறுகையில், “திரைத்துறையில் நானும் ஒரு பிரபலம், லட்சுமியும் ஒரு பிரபலம். இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு அதனை கடைசி வரை கொண்டு செல்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. என்னுடைய வாழ்க்கையில் எங்களுக்கு இடையான கணவன்-மனைவி உறவு 10 ஆண்டுகள் நீடித்தது. பின்னர் எங்களால் ஒன்றாக இணைந்து இருக்க முடியவில்லை.

இதையடுத்து தான், நாங்கள் பிரிந்தோம். ஆனால், கடந்த பேட்டியில் நான் பர்சனலாக சில விஷயங்களை மிகவும் ஓப்பனாக பேசி விட்டேன். உண்மையில் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. நான் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யார் மீது தவறு என்பதை விசாரணை கமிஷன் வைத்தெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த பேட்டியில் சொன்னது எல்லாமே உண்மைதான். உண்மை என்று நிரூபிக்க என்னிடம் இப்போது எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் போது, நான் அதை எப்படி நிரூபிப்பேன்.

நான் சொன்னது அனைத்துமே உண்மைதான். அதில் எனக்கு இப்போதும் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். நான் ஒத்துக் கொண்டேன். அது ஏன் அந்த சமயத்தில் நடந்தது என்று இப்போது என்னால் சொல்ல முடியாது. நான் அன்று என்னுடைய உள் உணர்வை கேட்டு அந்த முடிவை எடுத்தேன். நாங்கள் வாழ்ந்த 10 ஆண்டுகளில் எங்களுடைய உறவானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்தது. ஐஸ்வர்யா என்னிடம் வந்து லட்சுமி அம்மா பிற ஆண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது, அதனை நீங்கள் தீர விசாரித்தீர்களா என்று கேட்கிறீர்கள். ஆனால், நாங்கள் அப்பொழுதே பிரிந்து விட்டோம்.

ஒரே வீட்டிலேயே வெவ்வேறு அறைகளில் வசித்துக் கொண்டிருந்தோம். அப்படி இருந்த போது அதற்கு மேல் அதனை விசாரிப்பது என்பது தேவையில்லாத விஷயம். இதனையடுத்து தான், அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன். ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை உங்களுடைய ரத்தமாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் வேறு ஒரு தொடர்பில் இருப்பது என்பது அந்த குழந்தைக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்னுடைய வாழ்க்கையில் அந்த 10 ஆண்டுகள் தேவையில்லாத ஒன்றாக மாறி விட்டது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையில் அது மிகவும் மோசமான பகுதி என்றே கூறுவேன்” என்று பேசினார்.

Read More : TN JOB | தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! ரூ.35,000 வரை சம்பளம்..!!

Advertisement