முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!! அதி கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! எங்கெங்கு தெரியுமா..?

01:16 PM May 17, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை திருவாரூர், நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வரும் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 20ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மே 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?

Advertisement
Next Article