முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tn Govt: 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும்...!

05:50 AM May 24, 2024 IST | Vignesh
Advertisement

நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கடைகள் சரியான நேரத்தில் திறந்து பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல், பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Next Article