For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரேஷன் அட்டைதாரர்களே..!! கால அவகாசம் நீட்டிப்பு..!! இனியும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

While the deadline for linking ration card with Aadhaar was announced as June 30, 2024, it has now been extended to September 30.
10:48 AM Jun 13, 2024 IST | Chella
ரேஷன் அட்டைதாரர்களே     கால அவகாசம் நீட்டிப்பு     இனியும் மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

ஆதாருடன் ரேஷன் கார்டு இணைப்பதற்கு 2024 ஜூன் 30ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே, ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அது குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆதாருடன் ரேஷன் கார்டு இணைப்பதற்கு சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 2024 ஜூன் 30ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது பொது சேவை மையத்தை அணுகலாம் அல்லது வீட்டில் இருந்த படியே PDS போர்ட்டலுக்கு சென்று இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அடடே சூப்பர் நியூஸ்..!! இனி மாதந்தோறும் ரூ.1,000 இவர்களுக்கும் கிடைக்கும்..!! வெளியான அறிவிப்பு..!!

Tags :
Advertisement