முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கல்யாண வீட்டை கதிகலங்க வைத்த ரசகுல்லா..!! 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! பெரும் பரபரப்பு..!!

10:46 AM Nov 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஆக்ரா அருகே திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாட்டால் ஏற்பட்ட அடிதடியில் 6 பேர் காயமடைந்தனர்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஷம்சாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக ஷம்சாபாத் காவல்துறையினர் கூறுகையில், ”கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிஜ்பன் குஷ்வாகா பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரசகுல்லா தட்டுப்பாடாக உள்ளதாக ஒரு நபர் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் திருமண நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களிடையே பரவி, எதிர்பாராதவிதமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மோதலில் பகவான் தேவி, யோகேஷ், மனோஜ், கைலாஷ், தர்மேந்திரா, பவன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்” என்றனர்.

Tags :
உத்தரப்பிரதேச மாநிலம்கல்யாண வீடுமருத்துவமனை
Advertisement
Next Article