முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியா முழுவதும் நாளைய ரம்ஜான் கொண்டாட்டம்.!! தலைமை ஹாஜி அறிவிப்பு.!!

09:20 PM Apr 10, 2024 IST | Mohisha
Advertisement

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாதம் 30 நாள் நோன்பிருந்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டதும் தங்கள் விரதத்தை முடித்து பெருநாள் கொண்டாடுவார்கள்.

Advertisement

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இனிய இரண்டு கடமைகளான நோன்பு மற்றும் ஜகாத் இரண்டும் ரம்ஜான் கொண்டாட்டங்களோடு வருவதால் இந்தப் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. இவர்கள் கடந்த மார்ச் மாத முதல் நோன்பிருந்து வந்த நிலையில் சாப்டியா அரேபியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் பிறை தென்படாததால் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் இரவு 10 மணிக்கு பிறை தென்பட்டதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ரம்ஜான் பண்டிகையை இன்று கொண்டாடினர் . இதனால் நாளை விடுமுறை இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிவித்துள்ள தலைமை ஹாஜி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் எந்த குழப்பமும் இன்றி நாளை தான் ரம்ஜான் விடுமுறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Next Article