For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மிக்ஜாம்" புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...!

09:23 AM Dec 07, 2023 IST | 1newsnationuser2
 மிக்ஜாம்  புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Advertisement

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார். அவருடன் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வலத்துறை இணையமைச்சர் எல் முருகனும் உடன் வந்துள்ளார். இருவரும் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

Advertisement

மத்திய அமைச்சர்களுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறார் . பின்னர், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைத் தலைமைச்செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிய உள்ளனர்.

Tags :
Advertisement