For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள்.. கலை நிகழ்ச்சியில் இணையும் சூப்பர் ஸ்டார், உலக நாயகன்..!! என்ன விஷயம் தெரியுமா?

Rajini and Kamal are going to act in a play together to pay off the debt of the actor's association. Karthi confirmed that both of them will be acting in the performance.
01:43 PM Sep 08, 2024 IST | Mari Thangam
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள்   கலை நிகழ்ச்சியில் இணையும் சூப்பர் ஸ்டார்  உலக நாயகன்     என்ன விஷயம் தெரியுமா
Advertisement

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, “'நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான கலை நிகழ்ச்சிகளில் நடிகர் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பங்கேற்பதாக உறுதி தெரிவித்துள்ளனர்' என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் நிதிச்சுமை கூடுதலாக அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்திற்கு நடிகர் விஜய் கடனாக அல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். நடிகர் சங்க மகளிருக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும்  நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

ஜாம்பவான்களான இருக்கும் கமல், ரஜினி தமிழ் சினிமாவை கலக்கி வருகுறார்கள். இவர்கள் இருவரும் தனக்கென்று ஒரு பாணியை தேர்ந்தெடுத்து படங்கள் நடித்தனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ரஜினி, கமல் இணைந்து நாடகத்தில் நடிக்க உள்ளனர். இதற்காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் நடிக்க உள்ளதை கார்த்தி உறுதிப்படுத்தினார்.

Read more ; Moeen Ali | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்தார் மொயின் அலி..!! ரசிகர்கள் ஷாக்..

Tags :
Advertisement