தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை..! இந்திய வானிலை ஆய்வு மையம்..
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் மாதம் முதலே வெயில் வாட்ட தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்த வெப்பத்தின் தாக்கத்தால் சில மரணங்களும் நிகழ்ந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன் தான் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை குளிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது, ஏற்கனவே வெயில் வாட்டிக்கொண்டிருக்கும் நிலையில் கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் மக்கள், பெரிதும் கவலை அடைந்தனர். அந்த கவலையை போக்கும் வகையில் சில இடங்களில் கோடை மழை பெய்தது. இந்நிலையில் தற்போது வானியல் ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.