For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#சற்றுமுன் | காருக்குள் ராகுல்..!! கண்ணாடியை அடித்து நொறுக்கிய கும்பல்..!! பெரும் பரபரப்பு..!!

02:36 PM Jan 31, 2024 IST | 1newsnationuser6
 சற்றுமுன்   காருக்குள் ராகுல்     கண்ணாடியை அடித்து நொறுக்கிய கும்பல்     பெரும் பரபரப்பு
Advertisement

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி பயணம் செய்த கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசியதாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால், ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Advertisement

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யை பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் ரோட் ஷோவுடன் மீண்டும் தொடங்கினார். பாரத் ஜோடோ நியாய யாத்திரை பீகாரில் இருந்து மேற்கு வங்கத்தில் இன்று மீண்டும் நுழைந்தது. மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட யாத்திரை திங்கள்கிழமை முடிவடைந்து, இஸ்லாம்பூரிலிருந்து பீகாருக்குள் நுழைந்தது.

இந்த சம்பவம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'எங்கள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் இந்திய நீதி யாத்திரையை யாரும் தடுக்க முடியாது. இந்த பேரத்தில், "எந்த அச்சுறுதலுக்கும் இந்தியா கூட்டணி தலைவணங்காது. இந்தியா கூட்டணியின் கூட்டமைப்பை வலுப்படுத்துவதும் தனது நோக்கம்" என்று மேற்கு வங்காள முதல்வர் கூறியதை நினைவூட்டுகிறேன்" என்று கூறினார்.

Tags :
Advertisement