For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரிதாப நிலையில் ராதிகா..!! பறந்து பறந்து பிரச்சாரம் செய்யும் கேப்டன் மகன்..!! பரபரப்பில் தேர்தல் களம்..!!

04:57 PM Apr 02, 2024 IST | Chella
பரிதாப நிலையில் ராதிகா     பறந்து பறந்து பிரச்சாரம் செய்யும் கேப்டன் மகன்     பரபரப்பில் தேர்தல் களம்
Advertisement

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியான தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விஜய பிரபாகரன் செய்யும் பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக, வாகனங்களில் வேட்பாளர்கள் சென்று பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், விஜய பிரபாகரன் நேரடியாக வீடுகளுக்கே சென்று பிரச்சாரம் செய்கிறார்.

இதனால், அவருக்கு அங்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் மக்களுடன் எளிதாக பழகி வருகிறார். அதேபோல பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பரப்புரையை ரத்து செய்து சென்னை சென்றார். அதாவது, பிரச்சாரத்திற்கு கூட்டம் சேராததால் பரப்புரையை ரத்து செய்துவிட்டார். பின்னர், கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகாவை களமிறக்கியதை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. இதனால், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இதனால் பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, நாடார் வாக்காளர்கள் பலரும் ராதிகா மீது அனுதாபம் வைத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

Read More : ’படம் பிடிக்கவில்லை என்றால் செருப்பால் அடிங்க’..!! ஹாட்ஸ்பாட் திரைப்பட இயக்குநர் வேதனை..!!

Advertisement