For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அந்தர் பல்டி அடித்த ராதிகா..!! உனக்கு தைரியம் இருந்தால் யாரென்று சொல்..!! வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்..!!

While actress Radhika had said that actors enjoy watching Antaranga videos, famous critic Bailwan Ranganathan has given an interview to a YouTube channel about it.
11:25 AM Sep 06, 2024 IST | Chella
அந்தர் பல்டி அடித்த ராதிகா     உனக்கு தைரியம் இருந்தால் யாரென்று சொல்     வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்
Advertisement

கேரவனில் கேமரா பொருத்தி நடிகைகளின் அந்தரங்களை வீடியோக்களை நடிகர்கள் பார்த்து ரசிப்பதாக நடிகை ராதிகா கூறியிருந்த நிலையில், அது குறித்து பிரபல விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் பேசுகையில், "உண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பிரச்சனையை திசை திருப்புவதற்காகதான் இந்த ஹேமா கமிட்டி அறிக்கையானது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கேரளா அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால், கேரள அரசு இப்போதுதான் அதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து பல பெண்கள் குரல் கொடுத்திருந்தார்கள். அதில் முக்கியமானவர் நடிகை ராதிகா சரத்குமார். இந்த விவகாரத்தில் அவர் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டை கூறியிருந்தார். மலையாளம் படம் ஒன்றில் தான் நடிக்கும்போது, திடீரென்று அந்தப்படத்தின் நடிகர்கள் தன்னைப் பார்த்து சிரித்தார்கள் என்றும் இதையடுத்து அங்கு வேலை செய்யும் ஒரு பையனிடம் கேட்ட போது, நடிகர்களின் கேரவனில் பாத்ரூமில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அது சார்ந்த வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப்பையன் கூறியதாகவும் பேசி இருந்தார்.

உண்மையில் ராதிகா அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும். அந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த நபர்களை செவிளில் பளார் பளார் என்று அடித்து, போலீசில் புகார் கொடுத்திருந்தால் அவரை அன்றைய தினமே இந்த திரையுலகம் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு ராதிகா தனக்கு இப்படி நடந்தது என்பதை இப்போது இந்த பரபரப்பிற்கு இடையே பேசி இருக்கிறார்.

இதை பார்த்த கேரள போலீஸ், ராதிகாவிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்ல, அவர் அந்தர் பல்டி அடித்துவிட்டார். ஆம், ராதிகா காவல்துறையிடம், நான் பெயரையெல்லாம் சொல்ல மாட்டேன் கூறிவிட்டாராம். உண்மையில், உங்களுக்கு தைரியம், திராணி இருந்தால், தைரியமாக இவர்கள் தான் மலையாள திரையுலகில் அந்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லுங்கள்.

அவர் செய்தது படுத்து கிடந்து, அவர் மீதே அவர் எச்சில் துப்புவது போல ஆகிவிட்டது. உண்மையில் சொல்லப்போனால் அவர் சொன்ன காலத்தில் மலையாளத்தில் கேரவனே கிடையாது" என்று நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

Read More : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! சவரனுக்கு எவ்வளவு உயர்வு..?

Tags :
Advertisement