For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’என்னை விட்ரு’..!! கரும்புத் தோட்டத்திற்குள் மாணவியின் அழுகுரல்..!! எட்டிப் பார்த்த விவசாயி பேரதிர்ச்சி..!! தர்ம அடி கொடுத்த மக்கள்..!!

When a young man named Dhanush brought the student in her school uniform and tried to rape her in a sugarcane garden, the student refused to comply with his wishes.
10:15 AM Sep 21, 2024 IST | Chella
’என்னை விட்ரு’     கரும்புத் தோட்டத்திற்குள் மாணவியின் அழுகுரல்     எட்டிப் பார்த்த விவசாயி பேரதிர்ச்சி     தர்ம அடி கொடுத்த மக்கள்
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர், மாலை வேளையில் நமச்சிவாயபுரம் கிராம எல்லையில் உள்ள தனது நிலத்திற்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் இருந்து “என்னை விட்டுடு, என்னை விட்டுடு" என்று ஒரு பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. பின்னர், அருகில் சென்று நடந்த சம்பவத்தைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளார் ரமேஷ்.

Advertisement

பள்ளி சீருடையில் இருந்த மாணவியை தனுஷ் என்ற இளைஞன் அழைத்து வந்து, கரும்புத் தோட்டத்தில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவனது ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார் மாணவி. இதனால், அவரது கழுத்தைப் பிடித்து, குரல்வளையை நெரித்து, அவன் கொலை செய்ய முயன்ற சம்பவம்தான் அது. இதை நேரில் பார்த்த விவசாயி ரமேஷ், கரும்புத் தோட்டத்தில் இப்படி அத்துமீறிய செயலில் ஈடுபடலாமா என்று தட்டிக்கேட்டதும், அந்த மாணவியை அங்கேயே விட்டுட்டு, தப்பியோடியுள்ளான்.

இதையடுத்து, அந்த மாணவிக்கு புத்திமதி சொல்லி, பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களான முரளி, திருவேங்கடம், ரஜினி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, ரமேஷைத் தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். ரமேஷ் நிலத்திற்கு சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில், அங்கு சென்றும் தேடிப்பார்த்துள்ளனர்.

அப்போது, நிலத்தில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த விவசாயி ரமேஷை வழிமறித்து, நாங்க யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு போவோம், வருவோம். உங்க பொண்டாட்டி புள்ளைகளையா கூட்டிட்டு போனோமுனு சொல்லி, வாய்க்கு வந்தபடி திட்டி அடித்து உதைத்து, கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, அருகில் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து, அந்த இளைஞர்களை கொத்தாக மடக்கிப் பிடிக்க முயன்றபோது, தனுஷ் மட்டும் கெத்தாக அங்கேயே நின்றுள்ளான். மற்ற மூவரும் தலைதெறித்து ஓடினர்.

அதனைத் தொடர்ந்து, போலீசாரை வரவழைத்து தனுஷை அவர்களிடம் ஒப்படைத்தனர். கரும்புத் தோட்டத்தில் அத்துமீறலாமா எனத் தட்டிக்கேட்டு, தர்ம அடி வாங்கியதால் படுகாயம் அடைந்த விவசாயி, சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் விவசாயி ரமேஷ், தனுஷை அடிக்க முயன்றபோது அருகிலிருந்த அவரது நண்பரான முரளி தடுத்துள்ளார்.

அப்போது தப்பு செஞ்சவனுக்கு துணை நிற்கின்றாயா எனக்கூறி, ரமேஷ் அவரை தள்ளி விட்டதில், கீழே விழுந்த அவருக்கு கன்னம், கை உள்ளிட்ட சில இடங்களில் காயம் ஏற்பட்டு அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீசார், முதல்கட்டமாக நடந்த இந்தச் சம்பவத்திற்கு மிக முக்கியக் காரணமான தனுஷை கைது செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனுஷை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

Read More : நடிகை பார்வதி நாயர் மீது பாய்ந்தது வழக்கு..!! அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா..? கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement