For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம்..!! முதல் நாளே இப்படியா..? பெரும் பரபரப்பு..!!

07:22 AM Jan 23, 2024 IST | 1newsnationuser6
அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம்     முதல் நாளே இப்படியா    பெரும் பரபரப்பு
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகைதர ஒருகட்டத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்தது.

Advertisement

இதனால், ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கோயில் உள்ளே நுழைய முயன்றனர். பின்னர், அங்கு இருந்த ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியுற ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கோயில் வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement