For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெளிமாநில அழகிகளை அடைத்து வைத்து படுஜோராக நடந்த விபச்சாரம்..!! வசமாக சிக்கிய ரவுடி..!!

11:56 AM Apr 30, 2024 IST | Chella
வெளிமாநில அழகிகளை அடைத்து வைத்து படுஜோராக நடந்த விபச்சாரம்     வசமாக சிக்கிய ரவுடி
Advertisement

புதுச்சேரி மாநிலம் உப்பளம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலியார்பேட்டை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அழகிகளை அடைத்து வைத்து விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 வெளிமாநில அழகிகளை போலீசார் மீட்டனர். தொடர் விசாரணையில், அவர்களை புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாலாஜி (35) என்பவர் விபச்சாரத்துக்கு அழைத்து வந்து பிரபல ரௌடி ஐய்யப்பனிடம் ஒப்படைத்து இருந்ததாக தெரியவந்தது.

Advertisement

அதனடிப்படையில், வில்லியனூர் ஆரியபாளையம் அய்யப்பன் (எ) மணிகண்டன் உதவியுடன் ஆன்லைன் மூலமாக அழகிகளின் புகைப்படங்களை அனுப்பி வாடிக்கையாளர்களை மேற்கண்ட விடுதிக்கு அழைத்து வந்து விபச்சார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலாஜி, மணிகண்டன், விடுதி மேலாளரான முத்தமிழன் (30), வாடிக்கையாளர்களாக வந்திருந்த உப்பளம் அவ்வை நகர் தினேஷ் (38), ரெட்டியார்பாளையம் லோகேஷ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அழகிகளை விலைக்கு வாங்கி விபச்சார தொழிலை நடத்தி வந்த முக்கிய குற்றவாளியான ஐய்யப்பனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கோவாவில் பதுங்கியிருப்பதாக காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், கோவா சென்று ரௌடி ஐய்யப்பனை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

Read More : தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் வளர்வது எவ்வளவு அவசியம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Advertisement